அம்மா! அனைவரும் அழைக்கின்றனர்
அன்பில்;
என் பிள்ளையும்தான்
பசியில்!
மக்கள் உண்ணும் உணவு – இன்று
எங்களுக்கு ஆனது கனவு.
பசேலென்ற இடங்கள்
குடியிருப்பு ஆனது – மீதமும்
இன்று தரிசாய்ப் போனது.
பெருகி வரும் எங்களின்
உயிரிழப்பு;
வருங்கால உலகிற்கு
பேரிழப்பு.
நதிகளையும்
தேசியமயமாக்கவில்லை – இன்று வரை
நிரந்தர தீர்வும்
காணவில்லை.
இருபது ஆண்டுகளுக்கும்
மேலாய்ப் பேச்சுவார்த்தை;
ஒவ்வொரு முறையும்
கேள்விக்குறியாகின்றது
எங்கள் வாழ்க்கை.
உங்கள் கவனத்திற்கு,
நாட்டின் முதுகெலும்பு
சற்றே தோய்வடைகின்றது,
தேய விடமாட்டீர்கள் என்று
நம்புகிறோம்.
இப்படிக்கு,
எதிர்கால நலம் விழையும் நிகழ்கால விவசாயி.
சனவரி 6, 2013

No comments:
Post a Comment