நாட்களில்
காலமடைகின்றது.
இன்புற்று வாழ்ந்த வாழ்கை
இனிதே நிறைவடைகின்றது.
கடைசி நேர புத்தகப் புரட்டல்கள்;
கடைசி பஜ்ஜிக்கான விரட்டல்கள்;
பொருளில்லா பேச்சு வார்த்தைகள்;
அர்த்தமில்லா அரட்டைகள்.
குட்டிச்சுவற்றில்
குடியிருந்தோம்;
வகுப்பறைகளுக்கு விருந்தினரானோம்.
பாடவேளைகளில் பார்க்காதிருந்தோம்;
தேர்வு வேளைகளில் திடீர் நண்பர்களானோம்;
எதிர்பாரா
உதவிகள்;
காத்திருந்து கிடைத்த உறவுகள்!
சப்தமில்லா சண்டைகள்;
கரவொலியுடன் கூடிய கலாட்டாக்கள்.
இவை அனைத்தும்
இனி நடக்கப்போவதில்லை – இக்கல்லூரியில்
இனி நாம் கைகள் கோர்த்து நடக்கப் போவதுமில்லை.
நம் எழுதுகோள் இனி
ஒரே வண்ணத்தில் எழுதப்போவதில்லை;
வேறு வண்ணங்களில் வெவ்வேறு எண்ணங்களில்
சிறகடிக்கப்
போகிறோம்!
நம் வாழ்க்கை நம் வழியில் செழிக்கட்டும்;
நம் நட்பு இறுதிவரை நிறம் மாறாமல் இருக்கட்டும்.
பிப்ரவரி 28, 2014
